கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று வெகுவாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, நவம்பர் 1-ம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது, மாணவர்களை வகுப்புகளுக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 6-ம் வகுப்பு முதல் இன்று பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக, டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு, அரசு உதவி பெற்ற, அரசு உதவி பெறாத உள்ளிட்ட பள்ளிகள் அனைத்தும் 18-ம் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளது.
இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் செயல்படலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar