Press "Enter" to skip to content

மும்பையில் ஒரே பள்ளியில் 16 மாணவர்களுக்கு கொரோனா

மும்பையில் ஒரே பள்ளியில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் 16 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பை திரும்பினார்.

இதையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனால் அந்த மாணவன் படிக்கும் மாநகராட்சி பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் 16 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »