டெல்டா வைரசை விட ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலகமெங்கும் விரைவாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஜெனீவா:
ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியுள்ளது. ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகையை விட ஒன்றரை நாள் முதல் 3 நாளில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இரு மடங்காக அதிகமாக பரவுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar