மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் அதிகபட்சமாக 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மருத்துவர் உள்பட 2 பேருக்கு முதன் முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு பரவியுள்ளது.
மகாராஷ்டிராவில் 54, தலைநகர் டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாதிப்புக்கு உள்ளான 54 பேரில் 22 பேர் மும்பையில் கண்டறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar