வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க காவல் துறையினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அவர்களின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து, தலைமறைவான ராஜேந்திர பாலாஜி அவரது உறவினர்கள் உள்பட 4 பேரை தனிப்படைகள் சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேடி வருகின்றன.
இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை காவல் துறை குழு பெங்களூரு விரைந்துள்ளது.
இதையும் படியுங்கள்.. முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar