Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 8,907 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின்நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று அங்கு 36 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 93 ஆயிரத்து 297 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், அங்கு கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்த மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. 

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 33 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டுமே 797 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »