Press "Enter" to skip to content

முழு ஊரடங்கு – வெறிச்சோடி காணப்படும் சாலைகள்

ரோந்து வாகனங்கள் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.  

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. 

சென்னை முழுவதும் 16 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 372 இடங்களில் காவல் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் நடைபெறுகின்றன. தேவையின்றி வரும் வாகனங்களில் வருவோர் நிறுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. 

தாம்பரத்தில் 72 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.  1200 காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆவடியில் 109 இடங்களில் வாகன தணிக்கை நடைபெறுகிறது. 1750 காவல் துறையினர் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரோந்து வாகனங்கள் மூலம், காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »