Press "Enter" to skip to content

தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய அண்ணன்-தம்பி தொடர் வண்டி மோதி பலி

ஜெய்பூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய அண்ணன் – தம்பி தொடர் வண்டி மோதி பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ், ராகுல்.

அண்ணன், தம்பியான இவர்கள் இருவரும் பப்ஜி விளையாட்டு மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள். குடும்பத்தினர்கள் கண்டித்தும் எப்போதும் பப்ஜி விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.

லோகேஷ், ராகுல் இருவரும் போட்டித்தேர்வுக்காக படித்து வந்தனர். இதற்காக படிக்க செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கள் தங்கள் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடினார்கள்.

தீவிரமாக பப்ஜி விளையாட்டில் கவனம் செலுத்தியதால் அந்த தண்டவாளத்தில் தூரத்தில் தொடர் வண்டி வருவதை அவர்கள் அறியவில்லை. தொடர் வண்டி என்ஜின் டிரைவர் ஒலியெழுப்பியும் அண்ணன், தம்பி இருவரும் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் இருவர்கள் மீதும் தொடர் வண்டி மோதியது. சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »