முழு ஊரடங்கு காரணத்தால் சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் இன்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
சென்னை வடபழனியில் உள்ள பிரசித்திப் பெற்ற முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
2007-ம் ஆண்டிற்கு பின் கோவில் புனரமைக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்குப்பின் தற்போது குடமுழுக்கு நடைபெற்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar