Press "Enter" to skip to content

73-வது குடியரசு தினம்: போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி மலர் வளையம் வைத்து மரியாதை!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

இதனையடுத்து தேசியக்கொடியை ஏற்றுவதற்காக ஆளுநர் ரவி காமராஜர் சாலையிலுள்ள விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »