ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஆகியவற்றை ஏற்றார்.
சென்னை:
நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது.
சென்னையில் காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இதை தொடர்ந்து அங்கு அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து மேடைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஆகியவற்றை ஏற்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar