பிரதமர் மோடி
புதுடெல்லி:
நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை 165.70 கோடி டோஸ்களை தாண்டியுள்ளது.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தகுதி வாய்ந்த 75 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இது மிகச் சிறந்த சாதனை என்று பாராட்டு தெரிவித்தார். தகுதி பெற்ற 75 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். அதற்காக சக குடிமக்களுக்கு வாழ்த்துகள். இது முக்கியமான சாதனை. எங்கள் தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது அனைவருக்கும் பெருமை. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar