103 வயதான எஸ்.கே. பரமசிவம் பூமிதான இயக்கத்தில் பங்கேற்றுத் தனது நிலங்களை நிலமற்ற ஏழை உழவர்களுக்கு வழங்கியவர் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கே. பரமசிவம் வயது மூப்பின் காரணமாக நேற்று மறைந்தார் என்று அறிந்து வருத்தமுற்றேன்.
103 வயதான எஸ்.கே. பரமசிவம் பூமிதான இயக்கத்தில் பங்கேற்றுத் தனது நிலங்களை நிலமற்ற ஏழை உழவர்களுக்கு வழங்கியவர் ஆவார். ஈரோடு மாவட்டத்தில் வெண்மைப் புரட்சியை நிகழ்த்தியதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
[embedded content]
Source: Maalaimalar