Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கொரோனா- தொடர்ந்து குறையும் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 38 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 624 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 84 ஆயிரத்து 470-ஆக அதிகரித்துள்ளது.

இன்று 38 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 37 ஆயிரத்து 544-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக 3998 பேருக்கு கொரோஒனா தொற்று பதிவாகியுள்ளது. கோவை 2865, செங்கல்பட்டு 1534,  ஈரோடு 1127, சேலம் 1181, திருப்பூர் 1497 என கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »