சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி லாவண்யா பெற்றோர் தரப்பில் தொடரப்பட்டிருந்த வழக்கில்,உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டனர். லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி காவல் துறை நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை சிபிஐ வசம் மாற்ற கோரி அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar