Press "Enter" to skip to content

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி

தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கிறது.பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.இந்த தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக – பாஜக இடையே அண்மையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:

அதிமுகவுடனான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பாஜக கேட்ட இடங்களை  ஒதுக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலில் மட்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்துப் போட்டி. அதிமுகவுடன் நல்லுறவு வருங்காலங்களிலும் தொடரும். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். 

தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தனித்துப் போட்டியிட மாநில பாஜக முடிவு செய்துள்ளது. தமிழக பாஜகவின் முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது.பாஜக, அதிமுகவின் பொது எதிரி திமுக. 8 மாத திமுக ஆட்சி குறித்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பிரச்சாரம் செய்யும். மத்திய அரசின் திட்டங்களை முன் வைத்து வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து பாஜக பிரச்சாரத்தில் ஈடுபடும். இவ்வாறு தமது பேட்டியின்போது அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »