Press "Enter" to skip to content

உ.பி. தேர்தல்- அகிலேஷ் யாதவுக்கு எதிராக மத்திய மந்திரியை களமிறக்கிய பாஜக

இதற்கு முன்பு அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை எதிர்த்து போட்டியிட்ட பாகெல், தோல்வி அடைந்துள்ளார்.

புதுடெல்லி:

உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல் முறையாக தேர்தல் களம் காணும் அவரை எதிர்த்து ஆளும் பாஜக சார்பில் மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் போட்டியிடுகிறார். ஆக்ரா தொகுதியின் பாஜக எம்.பி.யான பாகெல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், கர்ஹால் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

அகிலேஷ் யாதவ் இன்று கர்ஹால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், கர்ஹால் தொகுதியில் பாஜக யாரை நிறுத்தினாலும் தோற்பது உறுதி என்றார். 

இதற்கு முன்பு அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை எதிர்த்து போட்டியிட்ட பாகெல், தோல்வி அடைந்துள்ளார். தற்போது மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரியாக உள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »