Press "Enter" to skip to content

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவை தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. 

இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

சென்னை, கோவை, ஓசூர், திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சி பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டது.

தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி, கடலூர் ஆகிய மாநகராட்சிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. மொத்தம் 353 பேரின் பெயர்களை அறிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »