Press "Enter" to skip to content

கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 21 பேர் எல்லை தாண்டியதாக கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

ராமேஷ்வரம்:

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி 6 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதேபோல்  டிசம்பர் 20-ந் தேதி 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.  

பின்னர் அனைத்து மீனவர்களை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கடந்த 25ம் தேதி விடுதலை செய்தது. அவர்கள் இன்னும் தாயகம் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »