Press "Enter" to skip to content

லஞ்சம்-ஊழலை ஒழிக்க விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்: காணொளி மூலம் சீமான் பிரசாரம்

பெண்ணடிமைத்தனம் இல்லாத தூய தேசம் படைக்க விவசாயி சின்னத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காணொளி மூலம் பிரசாரம் செய்துள்ளார்.

சென்னை:

உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம். நடைபெற இருக்கிற பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்துக்கு நீங்கள் வாக்கு தர வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.

ஏழை-எளிய மக்கள் உங்களுடைய வாரிசுகள் உங்களிடமிருந்து உங்களுக்காகவே இந்த பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்தி வலிமை சேர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, தீண்டாமை, அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் இல்லாத தூய தேசம் படைக்க விவசாயி சின்னத்துக்கு வாக்கு செலுத்துங்கள். புதியதோர் தேசம் செய்வோம். மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்.

இவ்வாறு சீமான் பேசி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »