இந்திய அணியின் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 91 ஓட்டங்கள் சேர்த்தது.
அகமதாபாத்:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 43 ரன்னுக்கு 3 மட்டையிலக்குடை இழந்து இந்தியா தத்தளித்தது.
அடுத்து இறங்கிய கே எல் ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 91 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ராகுல் 49 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 64 ஓட்டத்தில் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 237 ஓட்டங்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar