தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு நேற்று 4,519 ஆக பதிவாகி இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 3,971 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,971 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 16 ஆயிரத்து 473 பேர் குணமடைந்துள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களில் 77 ஆயிரத்து 607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,837 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar