Press "Enter" to skip to content

பிரசித் கிருஷ்ணா அபாரம் – 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா 9 சுற்றுகள் வீசி 3 மெய்டன், 12 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 மட்டையிலக்குடுகள் வீழ்த்தி அசத்தினார்.

அகமதாபாத்:

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 237 ஓட்டங்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, 238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.  இந்திய பந்துவீச்சாலர்கள் அசத்தலாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மட்டையிலக்குடுகள் சரிந்தது. 

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 சுற்றில் 193 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. அந்த அணியின் ஷமார் புரூக்ஸ் 44 ரன்னும், அகேல் ஹொசைன் 34 ரன்னும், ஷாய் ஹோப் 27 ரன்னும், ஒடியன் ஸ்மித் 24 ரன்னும் எடுத்தனர்.

இதன் மூலம் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 மட்டையிலக்கு, ஷர்துல் தாக்குர் 2 மட்டையிலக்கு எடுத்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »