Press "Enter" to skip to content

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கல்லெண்ணெய் குண்டு வீச்சு

கல்லெண்ணெய் குண்டுகளை வீசிச் சென்ற நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 3 மது பாட்டில்கள் மூலம் கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த  துணை ஆணையர் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. கல்லெண்ணெய் குண்டு வீச்சை அடுத்து அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »