Press "Enter" to skip to content

பா. ஜனதா தொண்டர் கொலை: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுடன் மேற்கு வங்காளத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் பா.ஜனதா ஏராளமான யுக்திகளை கையாண்டது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, ராணுவம் என மத்திய அரசு அதிகாரத்தில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தியது.

ஆனால், மம்தா பானர்ஜி கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன் பா.ஜனதா அடக்கு முறையை கையாண்டதால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியிடம் குறைந்த வாக்குகளில் தோல்வியடைந்தார். இந்த கோபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பா.ஜனதா தொண்டர்களை கடுமையான வகையில் தாக்கினர். இதில் கொல்கத்தாவின் நர்கெல் டாங்காவில் பா.ஜனதா தொண்டர் அபிஜித் சர்கார் கொலை செய்யப்பட்டடார்.

அபிஜித் சர்கார் கொலை வழக்கை சிபிஐ-யின் சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏழுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இருக்கும் இடத்தை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால், தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »