Press "Enter" to skip to content

திருப்பதியில் 16ந் தேதி முதல் இலவச தரிசன அனுமதிச்சீட்டு – பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று இடங்களில் இலவச தரிசன அனுமதிச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை:

உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி பார்வை செய்து வந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழுமலையானை பார்வை செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

மேலும் திருப்பதி ஏழுமலையான் பார்க 300 ரூபாய் கட்டண அனுமதிச்சீட்டுகள் கணினிமய மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் இலவச தரிசன அனுமதிச்சீட்டுகளும் கணினிமய மூலமே வழங்கப்பட்டது. 

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை பார்க வரும் சாதாரணப் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இதை பெற்றுக் கொண்டு சாமி பார்வை செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்… அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரி மலையை புனித தலமாக மேம்படுத்த 16-ந்தேதி பூமி பூஜை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »