Press "Enter" to skip to content

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது

உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டுக்குள் செல்ல முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி ஜன்பாத் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அஜித் தோவலின் வீட்டுக்குள் காரில் வந்த நபர் அத்துமீறி நுழைய முயன்றார். தேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அந்த நபரிடம் விசாரித்தனர். உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டுக்குள் செல்ல முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜித் தோவல் வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் குறித்த விவரங்களை காவல் துறையினர் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »