Press "Enter" to skip to content

பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது – ரோகித் சர்மா கருத்து

பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் வெஸ்ட் இண்டீசை குறைந்த ஓட்டத்தில் கட்டுப்படுத்த முடிந்ததாக ரோகித் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20  போட்டியில் இந்திய அணி  6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 

இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 மட்டையிலக்குடுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 மட்டையிலக்குடையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 சுற்றுகள் வீசி 17 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். 

இது குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

பிஷ்னோய் மிகவும் திறமையான பையன், அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன.

அவர் எந்த நிலையிலும் பந்துவீச முடியும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. போட்டியை நாங்கள் சீக்கிரம் முடித்திருக்க வேண்டும், இந்த வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் அவர்களை(வெஸ்ட் இண்டீஸ்) குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »