Press "Enter" to skip to content

துப்புகொடுத்தால் தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பால்கஞ்சு என்ற மாவோயிஸ்டு பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ராய்ப்பூர்:

ஜார்க்கண்ட் மாநில காடுகளில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குண்டு வைப்பு, கடத்தல் போன்ற சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

அவர்கள் கொட்டத்தை ஒடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பால்கஞ்சு என்ற மாவோயிஸ்டு பயங்கரவாதி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவனை பிடிக்க காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

மேலும் அவனை பற்றி துப்புகொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்றும் காவல் துறையினர் அறிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் லோகர்தாதா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் பால்கஞ்சு சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற மாவோயிஸ்டுகள் தப்பி ஓடினர். காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்பட பலவற்றை கைப்பற்றினார்கள். தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை தேடி வருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 8 நாட்களில் 4 எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »