Press "Enter" to skip to content

கேரளாவில் கட்சி தொண்டர் படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது மார்க்சிஸ்ட் புகார்

இந்த கொலையை கண்டித்து நியூ மாஹே பகுதியில் பந்த் நடத்த ஆளும் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தலச்சேரி:

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் நியூ மாஹே பகுதியில் நேற்றிரவு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் மீனவர் ஹரிதாஸ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசர் தெரிவித்துள்ளனர்.பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஹரிதாஸ் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். 

இரண்டுஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)குகளில் வந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்திய போது ஹரிதாசின் சகோதரர் சூரன் அதை தடுக்க முயன்றார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. 

அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் ஹரிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சூர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹரிதாஸ், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரால் கொல்லப்பட்டதாக சி.பி.எம். குற்றம் சாட்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகள் இதுபோன்ற சம்பவங்களுக்கு வழிவகுப்பதாக மார்க்சிஸ்ட் தலைவர்

எம்.வி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.

கொலை குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஹரிதாஸ் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த கொலையை கண்டித்து நியூ மாஹே பகுதியில் கடையடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »