Press "Enter" to skip to content

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர். 

அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம், அவரது கையை கட்டுங்கள் என்று கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுின.

திமுக பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமாரை இன்று இரவு காவல் துறையினர் கைது செய்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »