Press "Enter" to skip to content

கோவை கருமத்தம்பட்டி நகராட்சி தி.மு.க. வசமானது

கோவை கருமத்தம்பட்டி நகராட்சியில் 14 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

கோவை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் கோவை கருமத்தம்பட்டி நகராட்சியில் 14 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 27 வார்டுகளில் 14 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று கருமத்தப்பட்டி நகராட்சியை தனது வசமாக்கியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »