Press "Enter" to skip to content

ரஷியா-உக்ரைன் இடையேயான முதல் நாள் போரின் முக்கிய நிகழ்வுகள்

உக்ரைன் மீது ரஷியா நேற்று அதிகாரபூர்வமாக போரை தொடங்கியது. உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்த போரின் முதல் நாள் முக்கிய நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வை.

மக்கள் விரும்பத்தக்கதுகோ :

இந்திய நேரப்படி அதிகாலை 4:52 மணி: உக்ரைன் மீது ரஷியா சைபர் தாக்குதல். அரசின் முக்கிய துறைகளின் கணினிகள் முடங்கின.

8:22 மணி: ‘உக்ரைனை தாக்காதவாறு படைகளை தடுத்து நிறுத்துங்கள், அமைதிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்’ என ரஷியாவிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கெஞ்சல்.

8:30 மணி: கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவிப்பு; குறுக்கிட்டால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என வெளிநாடுகளுக்கும் பகிரங்க மிரட்டல்.

9:04 மணி: உக்ரைன் மீதான தாக்குதல் நியாயமற்றது என அமெரிக்க ஜனாதிபதி பைடன் கண்டனம்.

9:19 மணி: ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதற்றத்தை உடனடியாக தணித்து, கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா வேண்டுகோள்.

9:47 மணி: உக்ரைனின் ஒடெசா, கார்கிவ் நகரங்களில் குண்டுவீச்சு.

10:29 மணி: உக்ரைனின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குவதாக ரஷிய ராணுவம் தகவல்.

10:34 மணி: ராணுவ சட்டத்தை அறிவித்த உக்ரைன் அதிபர், ரஷியா தாக்குதலால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தல்.

11:23 மணி: உக்ரைனின் வான்பகுதியை அபாய பகுதியாக ஐரோப்பா அறிவித்தது.

11:30 மணி: உக்ரைன் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு சீனா அறிவுறுத்தல்.

12:18 மணி: உக்ரைனின் விமானப்படை தளங்கள் மற்றும் தளவாடங்களை தகர்த்து விட்டதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு.

1:16 மணி: இதுவரை இல்லாத அளவுக்கு ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஆலோசித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.

2:40 மணி: உக்ரைனின் வான்பகுதியை ரஷியாவிடம் இருந்து பாதுகாக்க ராணுவ உதவி அளிக்குமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்.

3:21 மணி: ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்து விட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு.

3:32 மணி: ரஷியாவின் தாக்குதலில் இதுவரை 40 பேர் பலியாகி இருப்பதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தகவல்.

இதையும் படிக்கலாம்….உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாயம் – ரஷிய அதிபர் புதின் கருத்து

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »