Press "Enter" to skip to content

கிடுகிடுவென ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,408-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில், நேற்று ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்று முறை உயர்ந்தது. மூன்றாவது முறையாக ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.4,951க்கும் சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,801-ம், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து  ஒரு சவரன் ரூ.38,408-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியும் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.70-க்கும்,  கிலோ ரூ.70,000-க்கும் விற்கப்படுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »