Press "Enter" to skip to content

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு முயற்சி

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

புதுடெல்லி:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. இரண்டாவது நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால் டெல்லி திரும்பியது.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக  மீட்க மத்திய அரசு  முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது .

உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு வருகை புரிந்து, அங்கிருந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லை அருகே இருக்கும் இந்திய மாணவர்கள் வெளியுறவுக் குழுவுடன் ஒருங்கிணைந்து புறப்படும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது

மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »