Press "Enter" to skip to content

ரஷிய ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு

பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்ட நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கீவ்:

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் ராணுவமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்தது என உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்..

மேலும், உக்ரைனுக்குள் நுழையும் ஊடுருவல்காரர்கள் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டு மக்கள் பாட்டில் குண்டுகளை தயாராக வைத்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »