Press "Enter" to skip to content

ருமேனிய மக்கள், எல்லையில் பழச்சாறு கொடுத்து வரவேற்றனர்- நாடு திரும்பிய மாணவர்கள் தகவல்

மேற்கு உக்ரைனில் இருந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் படிக்கும் பல்கலைக் கழகத்தில் இருந்து ருமேனியா நாட்டு எல்லைக்கு செல்ல பல மணி நேரம் ஆகும்.

போர் நடைபெறும் உக்ரைனில் இருந்து தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, அங்கேரி ஆகியவற்றுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டு அங்கிருந்து இந்திய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

நேற்று முதல் மீட்பு விமானம் மூலம் 219 பேர் மும்பை வந்தடைந்தனர். நாடு திரும்பிய இந்திய மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றனர். உக்ரைனில் மருத்துவம் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஸ்ருதி கூறியதாவது:-

தற்போது மேற்கு உக்ரைனில் இருந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் படிக்கும் பல்கலைக் கழகத்தில் இருந்து ருமேனியா நாட்டு எல்லைக்கு செல்ல பல மணி நேரம் ஆகும். இதற்கான பஸ் வசதியை ருமேனிய அரசாங்கம் செய்து கொடுத்தது.

ஆனால் எல்லையில் உக்ரைன் மக்கள் அதிகளவில் குவிந்து இருந்ததால் நாங்கள் 4 மணி நேரம் அங்கேயே சிக்கிக் கொண்டோம். பின்னர் ருமேனியாவுக்குள் சென்றோம். அப்போது எங்களில் பலர் பசியில் இருந்தோம். எங்களிடம் தண்ணீர் மட்டுமே இருந்தது. கடும் குளிரும் வீசியதால் சோர்வுடன் இருந்தோம்.

அப்போது ருமேனிய மக்கள் எங்களுக்கு பிஸ்கெட், பழச்சாறு, சிப்ஸ் ஆகியவற்றை கொடுத்து வரவேற்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராதிகா குப்தா என்ற மாணவி கூறும்போது, ‘‘உக்ரைனின் செர்னிவிஸ்ட் நகரில் இருந்து வெளியேறியது எங்களுக்கு எளிமையாக தான் இருந்தது. ஆனால் கிழக்கு உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த பகுதி ரஷிய எல்லைக்குள் மிக அருகில் உள்ளது. அவர்கள் பயத்துடன் பதுங்கு குழிகளில் உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கூட கிடைக்கவில்லை’’ என்றார்.

இதையும் படியுங்கள்… தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »