ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹுருட்புரா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 நபர்களைப் பிடித்து பாதுகாப்புப் படையினர் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் பயங்கரவாதிகள் என்பதும், அவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
3 பயங்கரவாதிகளை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar