Press "Enter" to skip to content

2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் இமானுவேல் மேக்ரான்

பிரான்சில் வரும் ஏப்ரல் மாதம் 10 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவேல் மேக்ரான். அங்கு ஏப்ரல் 10 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் மேக்ரான் மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் மேல் உள்ள நம்பிக்கையால் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »