Press "Enter" to skip to content

மணிப்பூர் சட்டசபை தேர்தல்- இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

இம்பால்:

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடைபெற்றது.

முதற்கட்டமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், மீதி உள்ள 22 தொகுதிகளுக்கான இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதில் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 8.38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »