Press "Enter" to skip to content

2 மாதங்களுக்கு பிறகு கொரோனா புதிய பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 254 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 289 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,14,878 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,921 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த டிசம்பர் 28-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 6,358 ஆக இருந்தது. மறுநாள் 9 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு 3-ம் அலை காரணமாக தினசரி பாதிப்பு நாள்தோறும் அதிகரித்தது.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 2,190 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 254 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 289 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,14,878 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,651 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரத்து 721 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 63,878 ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 6,019 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 24,62,562 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 178.55 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 77.19 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 9,40,905 மாதிரிகள் அடங்கும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »