கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷியா, கடந்த மாதம் 24-ந் தேதி அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வந்தது
இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தும் தாக்குதலை ரஷியா தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
மக்கள் நலன் கருதி உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாகவும் மேலும் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar