Press "Enter" to skip to content

நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நேபாள நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

காத்மண்டு:

நேபாள நாட்டின் காத்மண்டில் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »