Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- புதிதாக 5,476 பேருக்கு தொற்று

நாடு முழுவதும் நேற்று 26,19,778 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 178.83 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 62 ஆயிரத்து 953 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,836 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 124 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 158 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,15,036 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 9,754 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 475 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 59,442 ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 4,436 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 26,19,778 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 178.83 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 9,09,985 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 77.28 கோடியாக உயர்ந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »