விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா வகை உலங்கூர்தி திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த உலங்கூர்தி பனி படர்ந்த பகுதிக்குள் பறந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்.. பா.ஜனதா வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்: சஞ்சய் ராவத்
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar