Press "Enter" to skip to content

பூண்டியில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி தி.மு.க. எம்.எல்.ஏ. பயணம்

மாணவர்கள் பயணம் செய்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பயணம் செய்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பூண்டியில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் பயனாளிகளுக்கு தங்கம் வழங்கினார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடை பயணமாக சென்றார்.

அப்போது பஸ்சுக்காக காத்திருந்த மாணவிகள் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ- மாணவிகள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் பூண்டியில் இருந்து புறப்பட வேண்டிய பஸ் அங்கு வந்து நின்றது. அதில் மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். அப்போது மாணவர்கள் பயணம் செய்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பயணம் செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையம் வரை அவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »