Press "Enter" to skip to content

தேர்தல் தோல்வி எதிரொலி- டெல்லியில் நாளை காங்கிரஸ் காரிய குழு கூட்டம் நடைபெறுகிறது

5 மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து, நாளை மாலை 4 மணியளவில் காங்கிரஸ் காரிய குழு கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

மேலும், உ.பியில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் இம்முறை கடுமையான தோல்வியை சந்தித்தனர்.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து, நாளை மாலை 4 மணியளவில் காங்கிரஸ் காரிய குழு கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், தேர்தலில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்..  ரசாயன ஆயுதங்களை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும்- ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »