Press "Enter" to skip to content

ரூ.39 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சென்னை:

உக்ரைன் – ரஷியா போரால் கடந்த மாத இறுதியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அதன் பிறகு தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ4.823-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ4,854ஆக உயர்ந்து விட்டது. பவுன் ரூ38 ஆயிரத்து 584-ல் இருந்து ரூ38 ஆயிரத்து 832 ஆக அதிகரித்து இருக்கிறது.

இன்று ஒரே நாளில் கிராம் ரூ.31 ரூபாயும், பவுன் ரூ.248-ம் உயர்ந்து இருக்கிறது.

இதே போல் வெள்ளி விலையும் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கிராம் ரூ.72.80-ல் இருந்து ரூ.73.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,800-ல் இருந்து 73,800 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »