உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனின் கார்கீவ் நகர மக்கள் ஒரு மாதத்திற்கும் மேல் பாதாள அறைகளில் பதுங்கி உள்ளனர்.
26.3.2022
00.05: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று போலந்து சென்றடைந்தார். உக்ரைன் எல்லை அருகிலுள்ள ராணுவ முகாமுக்குச் சென்ற அவர் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
உக்ரைன், ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதிபர் ஜோ பைடனின் போலந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar