Press "Enter" to skip to content

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது செம்மொழியான தமிழ் – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த சர்வதேச கண்காட்சியில் சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய்: 

துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 25 முதல் மார்ச் 31-ம் தேதி வரை அங்கு தமிழ்நாடு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, சர்வதேச முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கை நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் விளக்கும் வகையில் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »